சென்னையில் வெகு வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்!
By: Monisha Tue, 26 May 2020 3:06:26 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இருப்பினும் தமிழக மக்கள் அதனை எச்சரிக்கையாக எடுத்து கொள்ளாமல் தங்கள் இயல்பான பணிகளை எந்த கவலையும் இன்றி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னை ராயபுரத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. இங்கு 2065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரத்தை அடுத்து கோடம்பாகத்தில் 1488 பேர்களும், திருவிக நகரில் 1253 பேர்களும், தேனாம்பேட்டையில் 1188 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1096 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை அண்ணாநகரில் 924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இம்மண்டலமும் 1000ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் வளசரவாக்கத்தில் 740 பேர்களும், அடையாறில் 619 பேர்களும், அம்பத்தூரில் 472 பேர்களும், திருவொற்றியூரில் 322 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.