Advertisement

கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Sat, 16 May 2020 9:30:39 PM

கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

கேரளாவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் திருச்சூர், 3 பேர் கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் தலா 2 பேர். மாநிலத்தில் தற்போது 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

hospital,kerala,corona,vulnerability,surveillance ,மருத்துவமனை, கேரளா, கொரோனா, பாதிப்பு, கண்காணிப்பு

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் தெரிவித்துள்ளதாவது:

புதிதாக பாதிப்புக்குள்ளான 11 பேரில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 4 பேர் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதியில் கேரளாவில் மொத்தம் 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56,362 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், பல்வேறு மருத்துவமனைகள் 619 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.

Tags :
|
|