கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.33 லட்சமாக உயர்வு
By: Nagaraj Mon, 15 June 2020 1:09:03 PM
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,33,008 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,382 கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகியுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 1,69,689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கிறது.
தற்போது 1,53,760 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 21,62,144 பேர்களுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 867,882 பேர்களுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 528,964 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது