தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது
By: Karunakaran Sat, 23 May 2020 4:18:19 PM
கொரோனா தொற்று நாளுக்கு நாள்உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நோயின் தாக்கம் குறைவாக உள்ளதால் 50% அளவிற்கு தொழிற்சாலைகள், அத்தியாவசிய கடைகள் மற்றும் ஆட்டோக்கள் கட்டுப்பாடுடன் தளர்த்தப்பட்டுள்ளது .
இந்தியாவில் நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 125101 ஆக உள்ளது. மருத்துவ கவனிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 69597 ஆக உள்ளது. இதுவரையில் 51783 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15,000-ஐ நெருங்குகிறது: பலி எண்ணிக்கை 98
நேற்றில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6088 அதிகரித்துள்ளது. இதன் மூலம், நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,18,447 ஆக உள்ளது. மருத்துவ கவனிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 66,330 ஆக உள்ளது.
இதுவரையில் 48,533 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3234 பேர் குணம் பெற்றுள்ளனர். இதன் மூலம், குணம் பெற்றவர்களின் அளவு 40.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்று, பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதுவரை 1,847 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், குணமடைவர்கள் எண்ணிக்கை 91 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது .அங்கு , மருத்துவ கவனிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 143 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது