Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் - சிங்கப்பூர் பிரதமர்

கொரோனா தடுப்பூசி கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் - சிங்கப்பூர் பிரதமர்

By: Karunakaran Mon, 08 June 2020 5:07:48 PM

கொரோனா தடுப்பூசி கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் - சிங்கப்பூர் பிரதமர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஒருவேளை, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை கிடைக்க பல மாதங்கள் ஆகலாம்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும் என்று கூறியுள்ளார்.

coronavirus virus,singapore,lee chien lung,vaccination ,கொரோனா வைரஸ்,சிங்கப்பூர்,லீ சியென் லூங்,தடுப்பூசி

மேலும், காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும் என்று கூறினார்.

கொரோனா தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர் விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

Tags :