- வீடு›
- செய்திகள்›
- இந்தாண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கும்; டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தகவல்
இந்தாண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கும்; டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தகவல்
By: Nagaraj Fri, 19 June 2020 8:53:29 PM
இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது. பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தும் உள்ளன. இருப்பினும் கொரோனாவுக்கு இதுதான் தடுப்பு மருந்து என்று இன்னும் உறுதி செய்யப்படாத நிலைதான் இருந்து வருகிறது.
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கக்
கூடும் என நம்புவதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர்
சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களச்
சந்தித்தவர், கொரோனா வைரசுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித
பரிசோதனைக் கட்டத்தில் சுமார் 10 மருந்து மாதிரிகள் இருப்பதாகவும், அதில்
குறைந்தது 3 மாதிரிகள் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி வளர்ச்சி என்பது ஒரு சிக்கலான
வேலை மற்றும் ஏராளமான நிச்சயமற்ற தன்மைகளுடன் வருவதாக குறிப்பிட்டவர்,
பலவிதமான தடுப்பூசி மாதிரிகள் இருப்பது நல்ல செய்தி எனவும்
தெரிவித்துள்ளார்.