Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதித்த முதல்நபர் பூரண குணமடைந்ததாக தகவல்

யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதித்த முதல்நபர் பூரண குணமடைந்ததாக தகவல்

By: Nagaraj Wed, 27 May 2020 4:50:29 PM

யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதித்த முதல்நபர் பூரண குணமடைந்ததாக தகவல்

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இத்தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த வந்த மத போதகருடன் பழகிய தாவடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.


hospitalized,healed,65 days,first person,corona ,வைத்தியசாலை, குணமடைந்தார், 65 நாட்கள், முதலாவது நபர், கொரோனா


குறித்த நபருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருந்தமையினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தால் நீண்ட கால சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.

Tags :
|