Advertisement

இந்த நாட்களிலும் சொத்து வரி செய்ய மாநகராட்சி ஏற்பாடு

By: vaithegi Wed, 27 Sept 2023 09:40:02 AM

இந்த நாட்களிலும் சொத்து வரி செய்ய மாநகராட்சி ஏற்பாடு

சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதிநாளை (மிலாது நபி),

வருகிற செப்.30-ம்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன்கட்டிடத்தில் உள்ள வருவாய் துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த் துறைபிரிவுகளில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

corporation,chennai,property,business tax collection ,மாநகராட்சி ,சென்னை ,சொத்துவரி ,தொழில்வரி வசூல்

இதனை அடுத்து சொத்துவரி மற்றும் தொழில்வரியை வருகிற செப்.30-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், விதிகளின்படி வருகிற அக்.1-ம் தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும்.

எனவே, சொத்து உரிமையாளர்கள், வணிகர்கள் வருகிற செப்.30-க்குள்வரியை இணையதளம், தலைமையகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் போன்றவற்றின் வாயிலாக செலுத்தி, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :