Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு

By: Nagaraj Tue, 30 May 2023 11:20:42 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு

சென்னை: கலந்தாய்வு தொடக்கம்... தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவா்கள் விண்ணப்பித்தனா். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 20 வரை நேரடி முறையில் நடைபெறுகிறது.

முதல் 3 நாள்கள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சோ்க்கை நடைபெறும்.

more details,consultation,reservation,students,courses ,கூடுதல் விவரங்கள், கலந்தாய்வு, இடஒதுக்கீடு, மாணவர்கள், பாடப்பிரிவுகள்

பொது கலந்தாய்வு முதல்கட்டமாக ஜூன் 1 முதல் 10-ஆம் தேதி வரையும், 2-ஆம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும்.

தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படவுள்ளன. கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags :