Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவியை தவறாக படம் பிடிக்க முயன்ற டிடிஆர் கம்பி எண்ணுகிறார்

மாணவியை தவறாக படம் பிடிக்க முயன்ற டிடிஆர் கம்பி எண்ணுகிறார்

By: Nagaraj Sat, 19 Sept 2020 3:21:13 PM

மாணவியை தவறாக படம் பிடிக்க முயன்ற டிடிஆர் கம்பி எண்ணுகிறார்

மாணவியை தவறாக படம் பிடிக்க முயன்ற டிடிஆர்... சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கோவைக்கு கல்லூரிக்கு சென்றுவிட்டு கொளத்தூருக்கு ரயிலில் திரும்பினார்.

அதிகாலையில் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்றப்போது கல்லூரி மாணவி கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கழிவறையின் வெளியே நின்ற டிக்கெட் பரிசோதகர் மாணவியை செல்போனில் ஆபாசமாக படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

examiner,train,student,obscene filming,prosecution ,பரிசோதகர், ரயில், மாணவி, ஆபாசமாக படம் பிடிப்பு, வழக்குப்பதிவு

டிக்கெட் பரிசோதகரின் இந்த செயலை கவனித்த மாணவி கூச்சல் போட்டதால் சக பயணிகள் அங்கு குவிந்தனர். பின்னர் மாணவி நடந்ததை கூறியதையடுத்து டிக்கெட் பரிசோதகரின் செல்போனை பறித்து பரிசோதனை செய்தபோது, அவர் மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவி ரயில்வே ஹெல்ப் லைனில் தெரிவித்த புகாரை அடுத்து, டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் மேகநாதனை அடைத்தனர்.

Tags :
|