Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கதவை போராட்டக்காரர்கள் உடைத்ததால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதி

அமெரிக்காவில் கதவை போராட்டக்காரர்கள் உடைத்ததால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதி

By: Karunakaran Wed, 01 July 2020 10:52:36 AM

அமெரிக்காவில் கதவை போராட்டக்காரர்கள் உடைத்ததால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதி

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு போலீசார் பிடியில் சிக்கி கொல்லப்பட்டசம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு உலகின் பல்வேறு நாடுகளில் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்' என்ற பெயரில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் போலீஸ் துறைக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்கவேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மிஸ்சோரி மாநிலத்தில் உள்ள செயின் லூயிஸ் நகர மேயர் ஹுரிசன் போலீஸ் துறைக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்க கூறிய மக்களின் பெயர்கள், வீட்டு முகவரி வெளியிடப்பட்டதால், அதனை கண்டித்து 500-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கடந்த திங்கள் கிழமை மேயரின் வீடு நோக்கி செல்ல முற்பட்டனர்.

america,protest,intimidate,gun fire ,அமெரிக்கா, எதிர்ப்பு, மிரட்டல், துப்பாக்கி

அப்போது தனியாருக்கு சொந்தமான பகுதியில் உள்ள தவவை உடைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் வந்ததால், அதன் உரிமையாளர்களான மார்க் மற்றும் அவரது மனைவி பேட்ரிகா அவர்களை தடுக்க முற்பட்டனர். மேலும் அவர்கள், இது தனியாருக்கு சொந்தமான பகுதி. வெளி நபர்கள் அனுமதி இன்றி வரக்கூடாது என்று கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முன்னேறி கொண்டே வந்ததால், ஆத்திரமடைந்த தம்பதியர் தங்கள் வீட்டில் இருந்த துப்பாக்கிகளை கொண்டு வந்து போராட்டக்காரர்களை மிரட்டினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டக்காரர்களையும், தம்பதியினரையும் சமாதானம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags :