நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி
By: Nagaraj Sat, 14 Jan 2023 5:43:40 PM
திருவள்ளூர்: சேவல் சண்டைக்கு அனுமதி... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ஒட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் பெரியவடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி உள்ளது.
திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா விசாரித்தபோது, சேவல் சண்டையின் போது சூதாட்டம் நடத்தப்பட மாட்டாது.
சேவல்கள் துன்புறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தால், சேவல்
சண்டைக்கு அனுமதிக்க கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசாணையில்
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சேவல்களை துன்புறுத்தக்கூடாது,
சேவல் சண்டை நடக்கும் இடத்தில் கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும்,
சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது, சேவலுக்கு மது கொடுக்கக்கூடாது, கத்தி
கட்டக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த நீதிபதிகள் அனுமதி
அளித்தனர்.
சேவலின் கால்களுக்கு, குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும்
வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
நிபந்தனைகளை மீறினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.