துபாய்க்கு செல்ல டி.கே.சிவக்குமாருக்கு நீதிமன்றம் அனுமதி
By: Nagaraj Mon, 28 Nov 2022 11:50:22 AM
கர்நாடகா: துபாயில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க டி.கே.சிவக்குமாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் பதவி வகித்து வருகிறார். 2017-ம் ஆண்டு டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவகுமார் வீட்டில் ரூ.8.59 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு டெல்லியில் உள்ள மக்கள் பிரதிநிதி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் துபாயில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க
டி.கே.சிவக்குமாருக்கு கன்னட கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் துபாய் செல்ல அனுமதி கோரி டி.கே.சிவக்குமார் மக்கள் பிரதிநிதி
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை
நீதிபதி விகாஷ் துல் முன் நடந்தது.
அப்போது, அரசு
தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டி.கே.சிவக்குமாருக்கு வெளிநாடு செல்ல அனுமதி
வழங்கக் கூடாது என வாதிட்டார். டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல்
வாதங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,
டி.கே.சிவக்குமாருக்கு 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை துபாய் செல்ல அனுமதி
வழங்கினார்.