Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

By: Nagaraj Sun, 18 Dec 2022 5:50:06 PM

பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

குஜராத்: பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனு, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த 2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

court,waiver,reconsideration,petition,bilgis banu ,
நீதிமன்றம், தள்ளுபடி, மறு ஆய்வு, மனு, பில்கிஸ் பானு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பில்கிஸ் பானு, நவ..30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.

இம்மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதனிடையில் டிசம்பர் 13ம் தேதியன்று அமர்வில் இருந்த நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகினார்.

இந்நிலையில் நேற்று (டிச..17) நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பில்கிஸ் பானுவின் மறு ஆய்வு மனு, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags :
|
|