Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

By: Nagaraj Sat, 14 Oct 2023 5:26:10 PM

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

திருமலை: முன் ஜாமீன் வழங்கல்... சிறைக் கலவர வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமராவதி கேபிடல் டிசைன், இன்னர் ரிங் ரோடு டிசைன், பைபர் நெட் மோசடி ஆகிய பிரிவுகளில் சந்திரபாபு மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

anticipatory bail,case,chandrababu naidu,icourt,riot ,ஐகோர்ட், கலவரம், சந்திரபாபு நாயுடு, முன்ஜாமீன், வழக்கு

மேலும், ஆகஸ்ட் 8-ம் தேதி புங்கனூர் தொகுதிக்கு உட்பட்ட அங்கல்லு பகுதியில் சந்திரபாபு சுற்றுப்பயணத்தின் போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, போலீஸார் தாக்கப்பட்டதோடு, வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

கலவரத்துக்கு முக்கியக் காரணமான சந்திரபாபு நாயுடு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் பெற உள்ள நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சைபர்நெட் மோசடி வழக்கில் சந்திரபாபு நாயுடுவை வரும் 18ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

Tags :
|
|