Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

By: Nagaraj Mon, 10 Aug 2020 4:41:03 PM

ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதிமன்றம் அழைப்பாணை... வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை நிராகரிப்பு தொடர்பான மேன்முறையீட்டு மனு, அவரினால் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீள பெறப்பட்டுள்ளது.

colombo,bail cancellation,rajitha senaratne,meeting,whitewash ,கொழும்பு, பிணை ரத்து, ராஜித சேனாரத்ன, சந்திப்பு, வெள்ளைவேன்

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டிற்கும் எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு, வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில், ஏனைய இரு சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, நீதவான் நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி அறிவித்தார்.

குறித்த வழக்கில் பிணை இரத்துச் செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஜூன் 10ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவானினால், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :