Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சி.பி.சி.எல். நிறுவன உற்பத்தியை 100 சதவீத இருந்து 75 சதவீதமாக குறைக்க வேண்டும் .. மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சி.பி.சி.எல். நிறுவன உற்பத்தியை 100 சதவீத இருந்து 75 சதவீதமாக குறைக்க வேண்டும் .. மாசு கட்டுப்பாட்டு வாரியம்

By: vaithegi Wed, 10 Aug 2022 5:59:13 PM

சி.பி.சி.எல். நிறுவன உற்பத்தியை 100 சதவீத இருந்து 75 சதவீதமாக குறைக்க வேண்டும் ..  மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சென்னையை அடுத்த மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குருடாயிலை சுத்திகரித்து அதில் இருந்து தரம் பிரித்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என்று பல எரிபொருட்களாக தயாரிக்கப்படுகின்றது.

இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசிய காரணத்தால் அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் திருவொற்றியூர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர்.

pollution control board,cpcl company ,மாசு கட்டுப்பாட்டு வாரியம் ,சி.பி.சி.எல். நிறுவனம்

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் சி.பி.சி.எல். ஆலையை ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆலையின் உற்பத்தி இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் சுற்றுச்சூழல் மாசுபடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 100 சதவீத உற்பத்தியை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால் பெட்ரோல், சமையல் கேஸ் டீலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தொழிற்சாலை உற்பத்தியை குறைத்தாலும் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாமல் தங்கு தடையின்றி எரி பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் அடிப்படையில் உற்பத்தி 25 சதவீதம் குறைக்கப்படும் போது விநியோகஸ்தர்களுக்கு சப்ளை தட்டுப்பாடு வராமல் நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்தார். அதே போல் சமையல் கியாஸ் உபயோகிக்கும் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags :