Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகரித்து வரும் வெப்பநிலையால் வீடுகளில் ஏற்படும் விரிசல்.., ஆய்வாளர்கள் எச்சரிக்கை

அதிகரித்து வரும் வெப்பநிலையால் வீடுகளில் ஏற்படும் விரிசல்.., ஆய்வாளர்கள் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 19 Sept 2022 3:58:55 PM

அதிகரித்து வரும் வெப்பநிலையால் வீடுகளில் ஏற்படும் விரிசல்.., ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பிரான்ஸ்: வறட்சி மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதென இல் து பிரான்ஸ் குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

பிரான்ஸ் பிராந்தியத்தில் வீடுகளில் திடீரென பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வறட்சி மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதென இல் து பிரான்ஸ் குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இவ்வாறான பாதிப்பு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளையும் பாதித்த போதிலும் இல் து பிரான்ஸில் மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. 76.6 சதவீத நிலப்பரப்பில் அமைந்துள்ள நடுத்தர அளவிலான வீடுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான விரிசல்கள் திடீர் வெடிப்புகளை ஏற்படுத்தி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸில் வெப்பநிலை அதிகரிக்கும் போது வீடுகளில் கடுமையான விரிசல்களை ஏற்படுத்தி மழையின் ஆபத்தை அதிகரித்து விடுவதாக வீடுகளை ஆராய்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

houses,france,large explosions,warning,rain ,வீடுகள், பிரான்ஸ், பெரிய அளவில் வெடிப்புகள், எச்சரிக்கை, மழை

பலத்த மழை பெய்தால், தண்ணீர் தேங்கி, பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே கட்டுமானங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலைமையை காலநிலை ஏற்படுத்தி விடுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சென்-எ-மார்ன், எசோன் மற்றும் இவ்லின் ஆகியன மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும் என சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் உச்சக்கட்ட வெப்பம் போன்ற இயற்கை பாதிப்புகள் மாத்திரமே ஆபத்தானவைகளாக பார்க்க்பபடுவதாகவும், அவற்றினை விடவும் இவ்வாறான வீடுகளில் தங்கியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என இயற்கை அனர்த்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றங்களின் போது வீடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகரித்து அது வீட்டில் தங்கியிருக்கும் மக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட வீடுகள் மற்றும் பல குடும்பங்கள் இவ்வாறு பாதிப்பிற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags :
|
|