Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளுநர் மீதான விமர்சனத்தை கட்டுப்படுத்த வேண்டும்... புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

ஆளுநர் மீதான விமர்சனத்தை கட்டுப்படுத்த வேண்டும்... புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 14 Jan 2023 5:43:23 PM

ஆளுநர் மீதான விமர்சனத்தை கட்டுப்படுத்த வேண்டும்... புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: தமிழக ஆளுநரை சிலர் விமர்சித்து வருகின்றனர். யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியபோதும் ஒரு சிலர் விமர்சித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பாரம்பரியமாக மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டு, சுற்றியிருந்தவர்கள் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

congratulation,pongal,tamilisai soundararajan , தமிழிசை சௌந்தர்ராஜன், பொங்கல், வாழ்த்து, கருத்து, நாகரீகம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநரை சிலர் விமர்சித்து வருகின்றனர். யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று முதல்வர் கூறியபோதும் ஒரு சிலர் விமர்சித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். கவர்னர்களை வெறித்தனமாக வம்பு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது.

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்குவது மரபு. மேலும், தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட வரலாறு உண்டு. இதை அறிவித்த பெருமை காமராஜர் அண்ணாவுக்கும் உண்டு.

அதைக் காப்பாற்றுவது தமிழர்களாகிய நாம்தான். ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டால், அந்த கருத்தை நாகரீகமாக எதிர்க்க வேண்டும். பொங்கல் இனிமை போன்று இணையதளங்களில் தமிழ் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :
|