குவிந்த இசை ரசிகர்களால் நெரிசல்... போலீசார் உட்பட 11 பேர் பலி
By: Nagaraj Mon, 31 Oct 2022 7:07:50 PM
காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கின்ஷாசா மைதானத்தில் காங்கோ பிரபல பாடகர் ஃபாலி இபுபாவின் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கடல் அலையாய் திரண்டனர்.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமானதால், முண்டியடித்துக் கொண்டு ஏராளமானோர் நிகழ்ச்சி நடைபெறும் மேடை நோக்கி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், அங்கு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் தள்ளிக் கொண்டு முன்னேறியதால் பலர் மூச்சு விட திணறினர். சிலர் நெரிசலில் கீழே விழுந்து காயமடைந்தனர். இதில் சிக்கி 2 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.