Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சி.ஆர்.பி.எப். வீரர்களில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சி.ஆர்.பி.எப். வீரர்களில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Thu, 02 July 2020 09:24:30 AM

சி.ஆர்.பி.எப். வீரர்களில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கை கடைபிடிக்க அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் மக்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்களை கண்காணித்து வரும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crpf,corona virus,corona prevalence,134 soldiers ,சிஆர்பிஎஃப், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, 134 வீரர்கள்

தற்போது மேலும் 134 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 682 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிப்பு அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களில் 694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பினால் 9 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக சி.ஆர்.பி.எப். தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா பலி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|