செல்போன் திருடர்களை விரட்டி சென்று பிடித்த எஸ்.ஐ.க்கு குவியும் பாராட்டுக்கள்
By: Nagaraj Sat, 28 Nov 2020 8:50:25 PM
எஸ்.ஐக்கு குவியும் பாராட்டுக்கள்... செல்போனை திருடி சென்ற கொள்ளையனை தனிநபராக சென்று துரத்திப் பிடித்த எஸ்.ஐ.க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்களிடம் மொபைல் போனை திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த மாதாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ் கொள்ளையர்களை தனிநபராக இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.
அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்து
தப்ப முயன்றபோது அவரது சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி பிடித்தார்.
இந்த காட்சிகள் அருகில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
சினிமா
பாணியில் இந்த சேஸிங் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் எஸ்.ஐ., ரமேஷிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.