புனேயில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
By: Nagaraj Mon, 13 July 2020 11:49:23 AM
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புனேயில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி புனே பிம்ப்ரி – சின்ச்வாடு உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசு இன்று அறிவிக்கவுள்ளதுடன்,
அத்தியாவசியப் பொருள் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும்
தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த பகுதியில் போலீஸார்
சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கு விதிமுறைகளை 5 நாட்கள் கடுமையாக கடைப்பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :
pune |
curfew |
rules |
severity |