ஊரடங்கு ,தலைநகர் ,கொரோனாதலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு அமல்
By: vaithegi Wed, 25 Jan 2023 11:00:04 AM
பியோங்யாங்: சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அதிலும் குறிப்பாக வடகொரியா நாட்டை கொரோனா வைரஸ் இப்போது பாடாய் படுத்துகிறது.
இதையடுத்து இந்தநிலையில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவை அடுத்து வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.