டெல்லியில் தற்போது 2,696 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
By: vaithegi Sun, 24 July 2022 9:30:57 PM
புதுடெல்லி: டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதன் மூலம் டெல்லியில் இதுவரை மட்டும் பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,48,492 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,301 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,19,495 ஆக அதிகரித்துள்ளது.
இதை அடுத்து டெல்லியில் தற்போது 2,696 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.