Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கும் விரைவில் தேர்வு நடத்தி முடிக்க .. அன்புமணி ராமதாஸ் கல்வித்துறைக்கு கோரிக்கை

மாணவர்களுக்கும் விரைவில் தேர்வு நடத்தி முடிக்க .. அன்புமணி ராமதாஸ் கல்வித்துறைக்கு கோரிக்கை

By: vaithegi Thu, 30 Mar 2023 3:30:52 PM

மாணவர்களுக்கும் விரைவில் தேர்வு நடத்தி முடிக்க .. அன்புமணி ராமதாஸ் கல்வித்துறைக்கு கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலையானது 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

அதனால் மாணவர்களின் நலன் கருதி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தற்போது 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

dear ramadoss,department of education , கல்வித்துறை,அன்புமணி ராமதாஸ்

இதையடுத்து வருகிற 6-ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. ஆனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு பிறகு தேர்வு தொடங்கப்படும் எனவும் இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் தேர்வுகளை நடத்தி முடித்து, ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags :