Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேதிப்பொருளை அப்புறப்படுத்தக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு சுங்கத்துறை 6 முறை கடிதம்

வேதிப்பொருளை அப்புறப்படுத்தக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு சுங்கத்துறை 6 முறை கடிதம்

By: Karunakaran Fri, 07 Aug 2020 08:54:50 AM

வேதிப்பொருளை அப்புறப்படுத்தக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு சுங்கத்துறை 6 முறை கடிதம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 4-ந் தேதி மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டது.

தற்போது துறைமுக சேமிப்பு கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த உத்தரவிடக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு சுங்கத்துறை தரப்பில் கடிதம் எழுதியும் அந்த கடிதத்திற்கு எந்த உத்தரவு பிறப்பிக்கப்படாததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 750 டன் அளவுள்ள அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளுடன் சரக்கு கப்பல் பெய்ரூட் துறைமுகம் வந்தடைந்தபோது, கப்பலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த வேதிப்பொருட்கள் துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டது.

customs letter,6 times,beirut court,chemical ,சுங்கத்துறை, 6 முறை, பெய்ரூட் நீதிமன்றம், ரசாயனம்

வேதிப்பொருளின் ஆபத்தை உணர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தக்கோரி பெய்ரூட் நீதிமன்றத்திற்கு 2014 முதல் 2017 வரையிலான கால இடைவெளியில் 6 முறை கடிதம் அனுப்பியுள்ளனர். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆபத்து நிறைந்த வேதிப்பொருள்.இதை ஏற்றுமதி அல்லது மறுவிற்பனை அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்கவோ அனுமதி தரவேண்டும் என அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுங்கத்துறையின் 6 கடிதங்களுக்கும் பெய்ரூட் நீதிமன்றத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சுங்கத்துறையின் கடிதங்களுக்கு நீதிமன்றம் எதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால் இந்த பெரும் அழிவு தவிர்க்கப்பட்டிருக்கும். அலட்சியம் காட்டிய நீதித்துறையாலேயே இந்த கோர விபத்து நடைபெற்றுப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags :