Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜோ பைடன் கவலை

சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜோ பைடன் கவலை

By: Karunakaran Thu, 24 Dec 2020 07:39:45 AM

சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜோ பைடன் கவலை

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை, அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் இந்த சைபர் தாக்குதலை தடுப்பது மிகவும் சிக்கலாக உள்ளது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை கூறியது.

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ரஷியா இதனை மறுக்கிறது. இந்நிலையில் சமீபத்திய இந்த சைபர் தாக்குதல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

cyber attack,threat,national security,joe biden ,சைபர் தாக்குதல், அச்சுறுத்தல், தேசிய பாதுகாப்பு, ஜோ பிடன்

டெலாவேர் மாகாணத்தில் இதுகுறித்து ஜோ பைடன் பேட்டி அளிக்கையில், அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய தாக்குதல் ஆகும். இது எனது நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த சைபர் தாக்குதலின் நோக்கம் மற்றும் அது ஏற்படுத்திய சேதத்தின் அளவு பற்றி இன்னமும் எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் மிகவும் கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறினார்.

அதிநவீன சைபர் கருவிகளை பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பற்றிய டிரம்பின் பகுத்தறிவு மிகவும் குறைவு. நமது வாழ்க்கையின் பெரும்பகுதி ஆன்லைனில் நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் சைபர் தாக்குதல் என்பதை நமது தலைமை கடுமையான அச்சுறுத்தலாக கருத வேண்டும். ஆனால் டிரம்ப் தலைமை அப்படி செய்யவில்லை. அடுத்த 4 வாரங்களுக்கு அமெரிக்க நலனைப் பாதுகாப்பது ஒரு ஜனாதிபதியாக அவரது பொறுப்பாகும். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் நான் அதை செய்வேன் என தெரிவித்தார்.

Tags :
|