Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சைபர் மோசடிக்கு எல்லை கிடையாது ,பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் ... டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சைபர் மோசடிக்கு எல்லை கிடையாது ,பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் ... டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

By: vaithegi Wed, 30 Nov 2022 7:11:08 PM

சைபர் மோசடிக்கு எல்லை கிடையாது ,பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்   ...  டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை : சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில், ‘சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிஙரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, “சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். எந்த ஒரு வங்கியும் ஓடிபி ஏன் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண் யாராவது கேட்டால் அவளிடம் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது

எனவே, தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக 46 காவல்நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்காக இக்காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்..” என்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது. எனவே உலகத்தில் உள்ள எந்த நபரிடம் இருந்தும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம்.

Tags :