Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பைபார்ஜாய் புயல் ... இங்கு உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை

பைபார்ஜாய் புயல் ... இங்கு உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 13 June 2023 3:43:11 PM

பைபார்ஜாய் புயல்    ...  இங்கு உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை

இந்தியா: தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கடும் புயலாக மாறி உள்ளது. எனவே இதன் காரணமாக அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை ...

அரபிக்கடல் பகுதியில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்து உ ள்ளது. இந்த புயலுக்கு பைபார்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது போர்பந்தர் – துவாரகா இடையே மையம் கொண்டு உள்ளது.

holiday,baibarjoy storm ,விடுமுறை,பைபார்ஜாய் புயல்

மேலும் பைபார்ஜாய் புயல் மணிக்கு 9 கி. மீ வேகத்தில் நகர்ந்து சென்று வருகிற ஜூன் 15ம் தேதி மான்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துஉ ள்ளது. இதனையடுத்து குஜராத்தில் புயலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த புயலின் காரணமாக குஜராத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கருத்தில் கொண்டு சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கடலோர கட்ச், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் ஜூனாகத் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் வருகிற ஜூன் 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :