Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு

By: vaithegi Fri, 16 Sept 2022 1:45:36 PM

கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை தகுந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, முதல் அலையை காட்டிலும், அடுத்தடுத்த வந்த 2 மற்றும் 3ம் அலைகளில் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சமீபமாக, சில மாதங்களுக்கு முன்பு தான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களின் வழக்கமான செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடந்த 2 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து கொண்டு வருகிறது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போதிலும், மேலும், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், இனி வரும் நாட்கள் பண்டிகை காலமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்லும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை முறையாக செய்ய வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Tags :
|