Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது .. பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது .. பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ்

By: vaithegi Thu, 22 June 2023 10:16:44 AM

தமிழகத்தில் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது  ..   பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை:பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக உயர்வு ..... தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆவின் தொடர்பாக பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பேசினார். அவர் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பால் கொள்முதல் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார் .
இதையடுத்து அதில், ஏப்ரல் மாதம் கணக்கீட்டின் படி, ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 27.08 லட்சம் லிட்டராக இருந்தது. இந்த பால் கொள்முதல் மே மாத கணக்கீட்டின் படி 30.80 லிட்டராக அதிகரித்துள்ளது.

dairy minister,milk procurement ,  பால்வளதுறை அமைச்சர்,பால் கொள்முதல்

தற்போது சென்னையில் மட்டும் 80 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு பேசினார். மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விரைவான தார சான்று விலை நிர்ணயம் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

எங்கு கொள்முதல் நடைபெறுகிறதோ அங்கேயே பால் தரம் பார்க்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். இதனை அடுத்து மிக விரைவில் ஆவின் சிறந்த நிறுவனமாக வளரும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

Tags :