Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி

By: vaithegi Fri, 24 June 2022 08:00:49 AM

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தலாய்லாமா ரூ.10 லட்சம் நிதியுதவி

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரு வாரமாக இடைவிடாமல் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

funding,flood ,நிதியுதவி,வெள்ளம்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மிக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Tags :