Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறை சேதம்

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறை சேதம்

By: Karunakaran Mon, 31 Aug 2020 6:41:52 PM

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறை சேதம்

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது சொத்துக்கள் முழுவதையும் இந்த அணையை கட்டுவதற்காக செலவழித்துள்ளார். இதன் காரணமாக 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் இவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர முழு வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த தினமான ஜனவரி 15-ந் தேதி தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல் வைத்து பொதுமக்கள் விழா எடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

damage,tomb,colonel john penniquick,mullaperiyar dam ,சேதம், கல்லறை, கர்னல் ஜான் பென்னிக், முல்லை பெரியார் அணை

தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பென்னிகுவிக், கடந்த 11.3.1913-ம் தேதி அவரது சொந்த ஊரான லண்டனில் மரணமடைந்தார். இதனால் அவருக்கு லண்டன் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் தேவாலயத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை லண்டன் வாழ் தமிழ் மக்கள் அடிக்கடி பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த கல்லறையின் மீது அமைக்கப்பட்டு இருந்த சிலுவை வடிவிலான பாறை இடித்து அகற்றப்பட்டு இருந்தது. இது குறித்து சம்மந்தப்பட்ட தேவாலயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு கல்லறையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
|
|