திருப்பதி கோயிலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சாமி தரிசனம்
By: Nagaraj Tue, 06 Dec 2022 5:42:23 PM
திருப்பதி: திருப்பதி கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். மகா துவாரம் வழியாக தரிசனம் செய்ய சென்ற அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். ஆந்திர கவர்னர் விஸ்வபூஷண் அரிச்சந்திரன், ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி, மத்திய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி, எஸ்பி பரமேஸ்வர ரெட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் திருப்பதி வந்த குடியரசுத் தலைவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் வராஹ சாமி கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
மகா துவாரம் வழியாக தரிசனம் செய்ய சென்ற அவருக்கு கோவில்
நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு தேவஸ்தான செயல்
அலுவலர் தர்மா ரெட்டி லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.
அதன்
பிறகு அலிபிரியில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ மந்திர பூஜையில் கலந்து
கொண்டார். அதன்பின் திருப்பதியில் உள்ள மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்த
நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளிடம் பேசினார். குடியரசுத் தலைவர்
வருகையையொட்டி திருப்பதி முழுவதும் 1400 போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.