தாவூத் இப்ராஹிம் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளதாக தகவல்
By: Karunakaran Tue, 25 Aug 2020 3:18:41 PM
இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.
ஆனால் பாகிஸ்தான், தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது. கராச்சியில் ஆடம்பரமான பகுதியில் ஒரு அரண்மனை பங்களாவில் வசித்து வரும் அவர், பாகிஸ்தான் திரைப்படத் துறையில் உள்ள பல நடிகைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா துறைக்கும் நிழல் உலகத்திற்கும் மறைமுக தொடர்புகள் உள்ளன.
ஒரு காலத்தில், தாவூத் இப்ராஹிம் பாலிவுட்டில் மிகுந்த செல்வாக்கு பெற்று இருந்தார். மேலும் அவர் பல பாலிவுட் படங்களில் முதலீடு செய்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு ஓடிய பிறகும் தாவூத்தின் திரையுலகின் ஆர்வம் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தானில் ஒரு பெரிய கவுரவ விருது 'தம்கா-இ-இம்தியாஸ்' பாகிஸ்தான் நடிகை மெஹ்விஷ் ஹயாத்க்கு வழங்கப்பட்டபோது, பாகிஸ்தான் திரையுலகத்துடனான தாவூத்தின் உறவு 2019 ல் வெளிச்சத்துக்கு வந்தது.
மெஹ்விஷ் ஹயாத்துக்கு கவுரவ விருது வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் முடிவு குறித்து பலர் கேள்வி எழுப்பினர். மெஹ்விஷ் தாவூத் இப்ராஹிமின் கவனத்தை ஈர்த்தார் என்று கூறப்படுகிறது. கராச்சியைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க நபருடனான நெருக்கம் காரணமாக மெஹ்விஷ் பல பெரிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புகளைப் பெற்றார். மெஹ்விஷின் செல்வாக்கு உயர்வு, தாவூத் திரைப்படத் துறையில் இன்னும் நிறைய செல்வாக்கு உள்ளது என்பதை காட்டுகிறது.