Advertisement

நாளை மறுநாள் (ஆகஸ்டு 29) தேனி மாவட்டத்தில் மின்தடை

By: vaithegi Sat, 27 Aug 2022 2:45:47 PM

நாளை மறுநாள் (ஆகஸ்டு 29) தேனி மாவட்டத்தில்  மின்தடை

தேனி : நாளை மறுநாள் தேனி மாவட்டத்தில் வைகை அணை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இதனால் இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

அதன்படி நாளை மறுநாள் (ஆக. 29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை,தேனி ,மின்தடை ,தேனி

இதை தொடர்ந்து வைகை அணை உபமின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும்

அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (ஆக. 29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :