Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்செந்தூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் விநியோகம் தடை

திருச்செந்தூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 24 Aug 2022 6:30:37 PM

திருச்செந்தூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்  விநியோகம் தடை

திருச்செந்தூர் : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதை சரிப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதனை தவிர மக்களும் மின்சாரத்தின் தேவைகளை அறிந்து அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை தவிர மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை பராமரித்து சீரான மின்சாரம் வழங்குகிறது.

power supply interruption,tiruchendur ,மின்  விநியோகம் தடை ,திருச்செந்தூர்

அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி திருச்செந்தூர் மாவட்டம் கல்லாமொழி உப துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள ஆலந்தலை, கல்லாமொழி,

மேலும் கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய பகுதிகளில் அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :