Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி; வனத்துறை விசாரணை

இரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி; வனத்துறை விசாரணை

By: Nagaraj Sat, 12 Dec 2020 10:03:51 PM

இரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி; வனத்துறை விசாரணை

வனத்துறையினர் விசாரணை... இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், சமீப காலமாக கொரனோ தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி சிறுத்தை ஒன்று பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவ குழுவினர் சிறுத்தை குட்டியை பரிசோதித்து பார்த்து வாகனம் ஏதேனும் மோதி உள்ளதா? என்பதை விசாரித்து வருகின்றனர்.

Tags :