Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுதலைப்புலிகள் தலைவர் மரணம், மரபணு பரிசோதனை குறித்து எனக்கு தெரியாது

விடுதலைப்புலிகள் தலைவர் மரணம், மரபணு பரிசோதனை குறித்து எனக்கு தெரியாது

By: Nagaraj Sun, 02 July 2023 11:31:49 PM

விடுதலைப்புலிகள் தலைவர் மரணம், மரபணு பரிசோதனை குறித்து எனக்கு தெரியாது

கொழும்பு: எனக்கு எதுவும் தெரியாது... விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

controlled,prabhakaran,know nothing,final war,security ,கட்டுப்படுத்தினர், பிரபாகரன், எதுவும் தெரியாது, இறுதி யுத்தம், பாதுகாப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.

எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர்” என்றார்.

Tags :