சூரியின் பணமோசடி விவகாரம் தற்போது கொலை மிரட்டலாக மாறியதால் பரபரப்பு
By: Monisha Sat, 10 Oct 2020 3:25:52 PM
நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.2.7 கோடி ஏமாற்றியதாக வெளியான புகாரில் தற்போது மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக தற்போது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இந்நிலையில், சூரி கொடுத்த பணமோசடி விவகாரம் தற்போது கொலை மிரட்டல் விவகாரமாக மாறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சூரியின் புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும், இதனையடுத்து இதுகுறித்து சூரியிடம் விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் சூரி அவர்கள் முன் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.