- வீடு›
- செய்திகள்›
- மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,862 ஆக உயர்வு
மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,862 ஆக உயர்வு
By: vaithegi Tue, 12 Sept 2023 09:58:57 AM
மொரோக்கோ : மொரோக்கோ நாட்டில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
இதையடுத்து இந்த இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.
மராகேச் என்ற பகுதியிலிருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்க நிலையில் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் அத்துடன் 2,562 பேர் காயமடைந்து உள்ளனர்.