Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இன்று மட்டும் 22 பேர் பலி

சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இன்று மட்டும் 22 பேர் பலி

By: Monisha Tue, 16 June 2020 1:22:03 PM

சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இன்று மட்டும் 22 பேர் பலி

தமிழகத்தில் மொத்த 46,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 9 மணிவரை கொரோனாவுக்கு 22 உயிரிழந்துள்ளனர்.

tamil nadu,death,coronavirus,chennai ,தமிழ்நாடு,பலி,கொரோன வைரஸ்,சென்னை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags :
|