Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வரும் டிச. 23, 24ம் தேதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வரும் டிச. 23, 24ம் தேதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 22 Dec 2022 5:33:28 PM

இந்த மாவட்டத்தில் வரும் டிச. 23, 24ம் தேதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அதிக அளவு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. எனவே இதன் மூலம் ஏராளமான படித்த இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் 23,24ம் தேதிகளில் விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.அந்த மாவட்டத்தில் மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படவுள்ளது.

employment camp,villupuram , வேலைவாய்ப்பு முகாம்,விழுப்புரம்

எனவே இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இம்முகாமில் 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். மேலும் 8-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ கல்வித் தகுதி பெற்ற ஆண், பெண் என அனைவரும் பங்கேற்கலாம்.

மேலும் இதில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வேலை தேடி வருபவர்கள் முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags :