திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5 உள்ளூர் விடுமுறை
By: vaithegi Fri, 18 Nov 2022 6:28:44 PM
திருவாரூர் : வருகிற டிசம்பர் 5 உள்ளூர் விடுமுறை .... திருவிழா போன்றவை நடக்கும் போது தமிழகம் முழுவதும் இல்லாமல், குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு கொண்டு வருகிறது.
அவ்வாறு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்.
இதையடுத்து இந்த நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் அவரகள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.