Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளைஞர்கள் எதிர்காலத்தை கருதி இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு

இளைஞர்கள் எதிர்காலத்தை கருதி இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு

By: Nagaraj Tue, 02 May 2023 11:35:57 PM

இளைஞர்கள் எதிர்காலத்தை கருதி இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு

ஆஸ்திரேலியா இ-சிகரெட்டுகளுக்கு தடை... இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

புகை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

australia,government,ban,order,e-cigarette,study,information ,ஆஸ்திரேலியா, அரசு, தடை, உத்தரவு, இ-சிகரெட், ஆய்வு, தகவல்

மேலும், இ-சிகரட் பயன்படுத்துவோர் நாளடைவில் புகை பழக்கத்திற்கும் அடிமையாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவில், பதின் பருவத்தினர் அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இ-சிகரட் புகைக்கும் பழக்கம் அதிகரித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|