Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஏப்.25ம் தேதி நடத்த தீர்மானம்

உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஏப்.25ம் தேதி நடத்த தீர்மானம்

By: Nagaraj Tue, 07 Mar 2023 10:40:39 PM

உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஏப்.25ம் தேதி நடத்த தீர்மானம்

கொழும்பு: தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை... உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடியது.

election,april,commission,government officer,met today ,தேர்தல், ஏப்ரல் மாதம், ஆணைக்குழு, அரச அதிகாரி, இன்று கூடியது

இதன்போது திறைசேரி செயலாளர், அரச அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் திறைசேரி செயலாளர் அதில் கலந்துகொள்ளவில்லை.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags :
|