Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு

கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு

By: Monisha Wed, 03 June 2020 10:52:24 AM

கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு

கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பாக கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்களை திறப்பது தொடர்பாக நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்பு வரை மற்றும் 8-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 15-ந் தேதியும், மழலையர் பள்ளிகளை ஜூலை 20-ந் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

karnataka,july 1,commissioner of schools and education,school reopen ,கர்நாடகம்,ஜூலை 1-ந் தேதி,பள்ளிகள்,கல்வித்துறை கமிஷனர்

கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஒவ்வொரு பள்ளியும் குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும். அதன்படி கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வருகிற 5-ந் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 8-ந் தேதி குழந்தைகள் சேர்க்கை பணிகளை தொடங்கலாம். 15-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|