சில எரிபொருள் நிலையங்களை இடை நிறுத்த தீர்மானம்
By: Nagaraj Sat, 20 Aug 2022 11:26:42 AM
இலங்கை: இடை நிறுத்த தீர்மானம்... நாட்டில் சில எரிபொருள் நிலையங்களை இடை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் முன்னேற்ற மதிப்பாய்வு இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் கருத்துரைக்கையில், எரிபொருள் நிலையங்கள் மூலம் கியூ.ஆர் முறைமை செயற்படுத்துவது தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் கியூ.ஆர் நடைமுறைகளை உரிய முறையில்
பின்பற்றாத 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை
இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்
மேலும், குறித்த
எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.