Advertisement

தடுப்பூசி கிடைக்க செய்வதில் உறுதியான நடவடிக்கை

By: Nagaraj Sun, 06 Sept 2020 1:50:21 PM

தடுப்பூசி கிடைக்க செய்வதில் உறுதியான நடவடிக்கை

சிங்கப்பூரில் அனைவருக்கும் உரிய நேரத்தில் தடுப்பூசி கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் கான் கிம் யாங் கூறியதாவது:

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். செயல்திறன் மிக்க, பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி, சிங்கப்பூா் மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதில் உறுதியாக உள்ளோம். அதற்கான முக்கிய நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

vaccine,corona,singapore,authorities ,தடுப்பூசி, கொரோனா, சிங்கப்பூர், அதிகாரிகள்

இதற்கிடையே, சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன், நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,982-ஆக உயா்ந்துள்ளது.

நேற்று நிலவரப்படி நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 56,174 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளிலும், பராமரிப்பு மையங்களிலும் 781 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.

Tags :
|